இந¢நிலையில் அஜீத்திடம் நடிக்க கேட்டனர். விஷ்ணுவர்தன் பட ஷூட்டிங்கில் பிசியாக இருந்ததால் அவர் நடிப்பது முடிவாகாமல் இருந்தது. இந்நிலையில் அப்பட ஷூட்டிங்கிலிருந்து பிரேக் எடுத்த அஜீத், திடீரென இங்கிலீஷ் விங்கிலீஷ் இயக்குனர் கவுரியை தொடர்புகொண்டு, குறிப்பிட்ட நாளில் நடிப்பதாக தெரிவித்தார். இதையடுத்து பட யூனிட் ஷூட்டிங்கிற்கு தயாரானது. வழக்கம்போல் தனது நிஜ ஹேர் ஸ்டைலுடன் மூக்கு கண்ணாடி மட்டும் போட்டுக்கொண்டு ஸ்ரீதேவியுடன் அவர் நடித்தார்.
ஒரே நாளில் ஷூட்டிங் முடிப்பதாக திட்டமிட்டிருந்தனர். ஆனால் சில காரணங்களால் தாமதமானது. முதல் நாள் 6 மணி நேரம் நடித்து கொடுத்த அஜீத், மறுநாள் அதேபோல் 6 மணி நேர ஷூட்டிங்கில் பங்கேற்றார். சம்பளம் பற்றி பால்கி கேட்டபோது, அன்பாக மறுத்துவிட்டார் அஜீத். நான் ஸ்ரீதேவியின் தீவிர ரசிகன். அவருக்காகவே இதில் நடித்தேன். சம்பளம் எதுவும் வேண்டாம் என அவர் கூறியதாக பட வட்டாரங்கள் தெரிவித்தன.
Courtesy: isaithendral